மீண்டும் திறக்கப்படவுள்ள சங்கரில்லா ஹோட்டல்!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் சேதமடைந்த கொழும்பு சங்கரில்லா ஹோட்டல் மீண்டு இவ்வாரம் திறக்கப்படவுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் சங்கரில்லா ஹோட்டலிலும் பாரிய பாதிப்புகள், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் சீர்திருத்தம் செய்யப்பட்டு இவ்வாரம் 12 ஆம்த திகதி 6 மணியளவில் சங்கரில்லா ஹோட்டல் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment