கடவுச் சீட்டுகளில் மாற்றம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் என்று விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு - குடியகல்வு திணைக்களம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

குறித்த திணைக்களம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த மாதம் 31ஆம் திகதியுடன்  கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை இரத்துச்செய்யப்படுமென்றும், குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment