வித்தியா படுகொலை ; பொலிஸ்மா அதிபருக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்த உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் முதன்மைச் சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பாக முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிரான வழக்கில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கப்பட்டது. இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையொன்றை தாக்கல் செய்தனர்.

வழக்கின் சந்தேகநபரான முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி துசித் ஜோன்தாசன் குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினர் சமர்பித்த வழக்கு இலக்கம் வித்தியா படுகொலை வழக்கு இலக்கம் எனவும், அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்றும் வழக்கின் சந்தேகநபராக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதியே கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து விடயம் தொடர்பாக சரியான தகவலை மன்றுக்கு தெளிவுபடுத்துமாறும், குறித்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment