கிளிநொச்சியில் படைப்புழு விழிப்புணர்வு பேரணி

பயிர்களுக்கு சேதம் விளைவித்துவரும் படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை இப் பேரணி நடந்தது.

விவசாயத் திணைக்களத்தினர். கமநல  சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் யாழ் பல்கலை கழகத்தின்  விவசாய பீட மாணவர்கள் விவசாயிகள் ஆகியோர்  பேரணியில் கலந்துகொண்டனர்.

சோளம், இறுங்கு, கரும்பு, நெல், மரக்கறிகள், பழங்கள், அவரைப் பயிர்கள், உட்பட நூற்றுக்கு மேற்ப்பட்ட பயிர்களை அழிக்க கூடிய பீடை இதுவாகும். 

இது தொடர்பான விழிப்புணர்வுகளை விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில்  இப் பேரணி இடம்பெற்றுள்ளது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment