முடிவில் மாற்றம் இல்லை ; மஹிந்தவுக்கு வெளிவிவகார அமைச்சு பதிலடி


இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன் வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை அரசின் நிலைப்பாடு பற்றிய அறிக்கயை இன்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கவுள்ளது. 

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஏ.நொரின் புள்ளே ஆகியோர் ஜெனிவா அமர்வில் இலங்கை சார்பில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ள நாடுகளின் தூதுவர்களுடன், ஜனாதிபதி  சிறப்புக் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றும், இணை அனுசரணை வழங்கும் விடயத்திலிருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, பொது எதிரணியின் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்தே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் தலைமையில் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணைக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment