சுகப் பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி!



காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த செவிலியர், அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய அவர், சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்துள்ளார்.

குழந்தையின் தலை திரும்பியதும், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது. உடல் தாயின் கருப்பையில் சிக்கிக்கொண்டது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment