பாதுகாப்புச் செயலராக தயா ரத்னாயக்க

பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க  நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பாதுகாப்புச் செயலராக உள்ள ஹேமசிறி பெர்ணான்டோவைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அந்தப் பதவிக்கு ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிய வருகின்றது.

ஜெனரல் தயா ரத்னாயக்க 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2015 பெப்ரவரி மாதம் வரையில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி  சரத் பொன்சேகா  நியமிக்கப்படலாம் என்ற தகவலும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தற்போது வெளியாகியுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment