ஜ.சி.ஆர்.சியை நம்பியதாலேயே பலர் காணாமலாக்கப்பட்டனர்

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை நம்பித்தான் இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன் சென்று பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி.  

முல்லைத்தீவு மாவட்டத்தில்  837 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தினர் இதன்போதே அதன் தலைவி இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,

போரின்போது நம்பியிருந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை நம்பி  இறுதி போரில் வெள்ளைக் கொடியுடன் சென்ற வேளைல், அதிகளவானவர்கள் உயிரிழந்தார்கள்  அதற்கு முன்னர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் எங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் தான் கொடுத்தோம் யாருக்கும் விவரங்கள் செல்லக்கூடாது சர்வதேசத்தின் நம்பிக்கையில் நல்ல தீர்வு வேண்டும் என்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு  இன்றுவரைக்கும்  விபரம் அவர்களிடம் இருக்கின்றது.

தற்போது உள்ள காலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீவிரமாக வேலைசெய்துகொண்டு இருக்கின்றார்கள்.அதாவது அரசின் காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கு ஆதரவாக அவர்கள் வேலைசெய்வது எங்கள் மனதிற்கு வேதனையாக இருக்கின்றது.

வட்டுவாகல் தொடக்கம் ஓமந்தை,வவுனியாவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் வெள்ளைவான்களால் கடத்தப்பட்டது என்று பலதரப்பட்ட வகையில் எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவற்றை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தேடித் தரமுடியாது என்றால் எங்கள் மக்களுக்கு அவர்களால் ஏன் வாழ்வாதாரம் கொடுக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து, பத்து ஆண்டுகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காணாமல் போனவர்களுக்காக வேலைசெய்தார்களா?  அந்த பத்து ஆண்டுகளாக மக்களிடம் இல்லாத அக்கறை தற்போது அரசின் காணாமல் போனோர் அலுவலகம் வந்த பின்னர் ஏன் இந்த அக்கறை  என்பது எங்களுக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது

எனது கணவரைக் காணவில்லை என்று எனது கணவர் இருக்கின்றார் என்று புலனாய்வாளர்கள் என்றுசொல்லி வங்கியில் பணம் கட்டச் சொல்லி 75 ஆயிரம் பணம் கட்டி அது தொடர்பிலும் நீதிமன்றில் வழக்கு இருக்கின்றது இவ்வாறு பல்வேறு ஆதாரங்களுடன் நான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ரேன்.

இவ்வாறான நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. எங்கள் உயிர்போனாலும் கவலை இல்லை என்று துணிச்சலாக எங்கள் உறவுகளை தேடிப் போராடி வருகின்றோம்.

இந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முடிந்தால் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு சொன்னால் மட்டுமே போதும் மற்றும்படி மக்கள் போரில் சாகும்போது விட்டுவிட்டு ஓடும் போது என்ன யோசித்து ஓடினார்கள்.

 அரசு போகச்சொல்லும்போது போவார்கள் வரச்சொல்லும்போது வருவார்கள் காணாமல் போனோர் விவரங்கள் அனைத்தும் எடுத்து அரசுக்கு கொடுப்பார்கள் பின்னர் போவார்கள் அதன்பின்னர் நாங்கள் படும் வேதனைகளை யாரிடம் சொல்லி அழுவது.

ஜ.சி.ஆர்.சி என்ற ஒரு வசனத்தை நம்பித்தான் நாங்கள் இறுதிமட்டும் முள்ளிவாய்க்கால் வரையில் இருந்தோம் என்ன நடந்தது இறுதியில்.

நாங்கள் எங்கள் உறவுகளை அரசிடம் தான் கையளித்தோம் எங்களுக்கு உண்மையான நீதிவேண்டும் உண்மையில் நான் பதிக்கப்பட்டுள்ளேன் என்னால் முடியவில்லை நான் செத்தாலும் பொறுப்பு இந்த ஜ.சி.ஆர்சிதான்-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment