42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

 விற்பனைக்காக வைத்திருந்த ஒருதொகை கஞ்சாவுடன் இருவர் கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினரால்  கைது செய்யப்பட்டனர். 

யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த போதே 42 கிலோ கஞ்சாவை   பொலிஸார் கைப்பற்றினர். 

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, நேற்று  இரவு குறித்த வீட்டை  சுற்றிவளைத்தபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை, யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment