சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பத்தாவது தடவையாக  நடைபெறும் இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு யாழ் பொது நூலகத்தில்  நடைபெற்றது. 

இந் நிகழ்வில் யாழ் மாநகர சபையின் முதல்வர் யாழிலுள்ள இந்திய துணைத்தூதரக துணைத் தூதுவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இன்று 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் யாழ் மாநகர மைதானத்தல் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியை மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்  உத்தியோகபுர்வமாக  ஆரம்பித்து வைத்தார்.






Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment