போலி நாணயத் தாள்களுடன் யாழில் இருவர் கைது!

போலி நாணயத்தாள்களை பரமாற்றம் செய்ய முற்பட்ட இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கைதடி சந்தியில் வைத்து இன்று அதிகாலை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
5 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 20 நாணயத்தாள்களை வேறு ஒருவருக்கு கைமாற்ற முற்பட்டவேளை புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment