சீனா - கனடா மீண்டும் மோதல்!!

சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கலனை பதவியிலிருந்து நீக்கி உள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்தார் மெக்கலன். இதனை தொடர்ந்துதான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டின் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பதவியிலிருந்து விலகும்படி மெக்கலனை கேட்டுகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஏன் என்று சொல்லவில்லை. உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாவெய் உள்ளது.


இதன் அதிகாரி மெங் வான்ட்சொவை அமெரிக்கா கேட்டுகொண்டதற்கான கனடா அவரை கைது செய்தது. இதனால் சீனா கனடா மீது கோபம் கொண்டது. இரு நாட்டு உறவுகளும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டன.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment