புதிதாக நான்கு நீதியரசர்கள் நியமனம்!

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்இன்று முற்பகல் இவர்கள் நால்வரும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பி.டீ.சூரசேன, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அத்தோடு, மேல்நீதிமன்ற நீதிபதி கே.பி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற  நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment