விண்வெளிக்கு பயணமாகும் முதல் ஈழத்தமிழ் மாணவி!

ஈழத்தமிழ் மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு பயணமாகவுள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் சியோபன் ஞானகுலேந்திரன் என்ற மாணவியே, விண்வெளி தொடர்பான கற்கைநெறியில் சிறப்பு தேர்ச்சி பெற்று விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.
பிரித்தானியாவிலுள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றனர்.
செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியிலிருந்து நில அளவை செய்வது என பல துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின் றனர். இந்நிலையில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெ ளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்திருந்தது.
அதன்படி,  ஈழத்தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் திறமையாக செயற்பட்டு விண்வெளிக்கு செல்லும் இருவரில் ஒருவராக தெரிவு செய்யப்ப ட்டுள்ளார்.
மேலும் இவருடன் இணைந்து பிரித்தானிய மாணவியான டியானாவும் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment