மனிதப் புதைகுழியில் மீண்டும் ஒரு மர்மம்

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளின் போது  சிறு மனித எலும்புக்கூடு ஒன்று இன்றையதினம் மீட்கப்பட்டது.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணி 145 ஆவது தடவையாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.



மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இன்று சந்தேகத்திற்கு இடமான சிறு பிள்ளை ஒன்றின் மனித எலும்புக்கூடு மீட்க்கப்பட்டது. 

குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது.



தற்போது அந்த சிறு மனித எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடு 18 வயதுக்குற்பட்ட சிறுவருடையது எனத் தெரிவிக்கப்படுகிறது

இதுவரையில் இந்த மனித புதைகுழியில் 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 307 மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அகற்றப்பட்டுள்ளன.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment