எலும்புக்கூடுகள் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றன.

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு, 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டன. மறுநாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 25 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கூடத்துக்குக் கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த மாதிரிகள் ஆய்வு கூடத்தில் கையளிக்கப்பட்ட போது, ஆய்வு அறிக்கை 14 நாள்களின் பின்னரே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் எதிர்வரும் 14 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னரே ஆய்வு அறிக்கை கிடைக்கும் எனத் தெரியவருகின்றது.

ஆய்வு அறிக்கையின் பின்னரே மன்னார் மனித புதை குழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மை விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment