சிலாபத்தில் விபத்து ; கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் படுகாயம்

இரு வாகனங்கள்  ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்ததில் நால்வர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் சிலாபம் - கொழும்பு வீதியின் மாதம்பே பழைய நகரில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

காயமடைந்த நால்வரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , கொழும்பு - அவிசாவளை வீதியின் வெலிவிட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தும் உந்துருளியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment