காணாமல் போனவர் சடலமாக மீட்பு

காணாமல்போன நபரொருவர் இருதினங்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

51 வயதுடை 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி - தேற்றாத்தீவு கிராமத்தில் குறித்த நபர் காணாமல் போயிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை களுதாவளை குருகுளம் வீதியில் அமைந்துள்ள நீர்தேக்க பகுதி ஒன்றிலிருந்தே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது மட்டக்களப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment