துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆறு துப்பாக்கிகள் மற்றும் ஒருதொகை வெடி மருந்துகளும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்கம்பொல பிரதேசத்தினை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே மதுகம - மீகஹகத்தென்ன - குறுபிடவேவ  பகுதியில்  வைத்துக் கைது செய்யப்பட்டார்.

மீகஹகத்தென்ன பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment