போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

4 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர்  குற்றம் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியகம பேரகஸ் சந்தியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கபெற்ற தகவல் ஒன்றுக்கமைய நேற்று மாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தள்கள் 38ம் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 300 கைப்பற்றப்பட்டுள்ளது.

மல்வான பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment