மயங்கி வீழ்ந்தவர் சாவு

மயங்கி வீழ்ந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் நடந்துள்ளது.

நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்தவரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் விசாரணைகளை நடாத்தி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் மேற்கொண்டு, மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற் கூற்றுப் பரிசோதனை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment