மரை இறைச்சியுடன் இருவர் கைது

முச்சக்கரவண்டியில் மரை இறைச்சியை கொண்டு சென்ற இருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹல்தமுல்லை – வேயெலிய பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

சோரகுண மற்றும் அமிலகம பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 150 கிலோ கிராம் மரை இறைச்சி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment