நல் நிலைக்கான பயணம் ஆரம்பம்

“நல் நிலைக்கான பயணம்“ எனும் தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு வரையுள்ள நகரங்கள், கிராமங்களைக் கடந்து சென்று  சமூகத்தில் உள்ள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நடைபயணம் ஊடாக வலியுறுத்தப்படும்.

வவுனியா மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமாகிய இந்த நடைபயணம் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நிறைவடையும்.


குடும்ப புனர்வாழ்வு நிலையத்தால் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் மாவட்டச் செயலர் எம்.ஹனீபா, குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லகிரு பெரேரா,சுகாதார வைத்திய அதிகாரி லவன், பிரதேச செயலர் கா.உதயராஜா, அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment