பெண்ணின் உயிரை எடுத்த இராட்டினம்

இராட்டினம் உடைந்து வீழ்ந்ததில் தாயொருவர் உயிரிழந்ததுடன், மகள் படுகாயமடைந்துள்ளார்.

கம்பஹா – நய்வல பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இராட்டினத்தில் உள்ள  அமரும் பகுதி ஒன்று உடைந்து வீழ்ந்ததில்   இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சியம்பலாபிட்டி - கொட்டுகொட பகுதியை சேர்ந்த பெண் எனத் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 வயது சிறுமி கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment