கொக்கெய்னுடன் இந்தியர் கைது

கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் இருந்து இலங்கை வந்த 34 வயதுடைய ஒருவரே 1 கிலோ கிராம் கொக்கெய்னுடன்  தைானதாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 01 கோடி 50 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment