யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்றையதினம் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்

குறித்த மாணவனின் தலைப் பகுதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரியுமே யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment