கொக்குவில் குண்டுத்தாக்குதல் : நால்வர் கைது!




யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்;கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு விசேட பொலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பலொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியிருந்தது. இதன் போது அங்கிருந்த வாகனங்களும் எரிந்து நாசமாகியது.

இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்

இந் நிலையில் யாழ். மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவினர் நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து வாள்  கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். விசேட குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் கோப்பாய் பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர்.

இதற்கமைய நீதி மன்றில் பிற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment