4 ஆயிரம் கோள்கள் கண்டு பிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4 ஆயிரம் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்தக் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1992 ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே, சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.

ஐரோப்பாவின் 'தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா' இதுவரை 4  ஆயிரத்துக்கும் மேலான கோள்களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நாசா 4 ஆயிரம் எனும் இலக்கை அடைய இன்னும் 74 கோள்களை ஆவணப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment