ஆடு திருடிய இருவர் கைது

ஆடு  திருடிய இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏழாலை பகுதியினைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலி.வடக்கு வசாவிளான் குட்டியப்புலம் பகுதியில் மேய்ச்சல் தரவையில் நின்ற பெறுமதி மிக்க ஆடுகளே திருடப்பட்டுள்ளன.

ஆட்டின் உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த நபர்கள் இருவரும் திருடிய ஆட்டை முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவருரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment