இடாயால் பெரும் அழிவு

ஆபிரிக்க நாடான மொசாம்பிக் அருகே கடலில் பலம் வாய்ந்த புயல் ஒன்று உருவெடுத்துள்ளது. கரையைக் கடக்கும்போது அது கடுமையான அழிவை ஏற்படுத்துமென்று கூறப்படுகிறது.

இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

‘இடாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மணிக்கு சுமார் 225 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரமும், சுமார் ஐந்து இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட துறைமுக நகரான பெய்ராவில் இந்தப் புயல் கரையைக் கடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment