விபத்தில் சாவகச்சேரியைச் சேர்ந்தவர் காயம்

டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த விபத்து யாழ்ப்பாணம் கைதடி – மானிப்பாய் சாலையில் உரும்பிராயில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த முச்சக்கரவண்டிச் சாரதி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டிச் சாரதி சாவகச்சேரி மட்டுவிலைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment