நேருக்கு ​நேர் மோதல் ; அறுவர் காயம்

தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு ​நேர் மோதிக் கொண்டதில்  அறுவர் காயமடைந்தனர்.

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் கலா ஓயா பகுதியில்  இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் சேர்க்கப்பட்டனர்.   அவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பாதுகாப்பற்ற முறையில் பாரவூர்தி ஒன்று பாதையில் குறுக்காக பயணித்ததன் காரணமாகவே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் அநுராதபுரத்தில் இருந்து கலா ஓயா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.  

சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment