மின் துண்டிப்பின் பின்னணியில் ஊழல்

நாட்டில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பின் பின்னணியில் பெரிய ஊழல் மோசடியொன்று இடம்பெற்று வருகின்றது. தனியார் நிறுவனங்களின் அவசரகால மின்னுற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தவே திட்டமிட்ட வகையில் மின் துண்டிக்கப்பட்டு இவ்வாறு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் மின்சார சபை உயரதிகாரிகள் மற்றும் அமைச்சின் செயலருமே உள்ளனர் என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இதன்போதே, சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment