கத்தோலிக்கரை அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள்

கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் கருப்பு வெள்ளை மற்றும் நிற வடிவிலான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.

நேற்று  இரவு  சிவராத்திரி நிகழ்வின்போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய நுழைவுப் பகுதிக்கு புதிதாக வரவேற்பு வளைவு அமைப்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்து மக்களுக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் இடையில் முரண்பாடு இடம் பெற்றது.

இந்த நிலையிலேயே குறித்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில்  'மன்னார் வாழ் மத வெறி குரோதம் பிடித்த கிறிஸ்தவ மத குருக்களும், ஒரு சில கிறிஸ்தவ மக்களும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது'.

'தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்கு பதிலாக' 'இரண்டு தமிழ் அமைச்சர்கள்' மன்னாரில் உள்ளனர்(செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்)இவர்களும் மதம் சார்பாக உள்ளனர்.

இது தொடர்ந்து நடை பெறுமானால் உலக வாழ் இந்து தமிழ் மக்களின் நகர்வு வேறு பாதையை நோக்கி செல்லும்.

'இவ்வண்ணம் கிறிஸ்தவ மதவெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment