திடீரென மாயமான மணமகன்!



கடலூர் மாவட்டத்தில் பத்திரிக்கை கொடுக்க சென்ற மணமகன் மாயமானதால் திருமணம் நடைபெறாமல் தடைபட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவரது மகன் விவேக் (29). எம்.ஏ பட்டதாரியான இவருக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமணத்திற்கான வேலைகளில் இருவீட்டாரும் மும்மரமாக இறங்கியிருந்தனர். கடந்த 21ம் திகதி, பக்கத்து கிரமத்தை சேர்ந்த தோழி ஒருவருக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு வருவதாக கூறி, வீட்டிலிருந்து விவேக் கிளம்பியுள்ளார்.
ஆனால் அன்று முதல் வீடு திரும்பவில்லை. இதனால் நேற்று நடைபெறவிருந்த திருமணம் தடை பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வீரமணி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாயமான விவேக்கை தேடி வருகின்றனர்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment