மாதவன் இயக்கும் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'

நடிகர் மாதவன் இயக்கி, நடிக்கும் படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. 

இந்தப் படம் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.

படத்தை முதலில் இயக்குவதாக இருந்த ஆனந்த் மகாதேவன் விலகியதை அடுத்து, மாதவன் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

 சாம் சிஎஸ் இசையமைக்கும் இப் படத்தின் நாயகியாக சிம்ரன் நடிக்கிறார்.

 தமிழ்ப் பதிப்பில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும், ஹிந்திப் பதிப்பில் ஷாரூக்கானும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இருவருடனும் மாதவனுக்கு நல்ல நட்பு உண்டு. அதனால், அவர் கேட்டதுமே இருவரும் நடிக்க சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது.

படத்திற்காகத் தன் தோற்றத்தை மாற்றி நடிக்கும் மாதவன், மூன்று மொழிகளிலும் இயக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment