கிளிநொச்சியை வந்தடைந்தது சைக்கிள் பயணம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கக் கோரி மேற்கொள்ளப்பட்ட துவிச்சக்கர வண்டி பயணம் இன்று கிளி நொச்சியை வந்தடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றி வைத்து தனி வீடுகள் அமைத்து வழங்க கோரியும் இப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தர்மலிங்கம் பிரதாபன்(40) என்பவரின் பயணம் 23 நாளான இன்று 23 மாவட்டங்களைக் கடந்து கிளிநொச்சியை வந்தடைந்தது.

இவரது பயணம் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து மன்னார் ஊடாக வவுனியாவில் நிறைவடையவுள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment