குடிதண்ணீர்கோரி கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம்

குடிதண்ணீர்கோரி வவுணதீவு மக்கள்  கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்துள்ளனர். 

மட்டக்களமண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற  ஆர்ப்பாட்டத்தின்போது, உன்னிச்சை, நெடியமடு, காந்திநகர், பாவற்கொடிச்சேனை ஆயித்தியமலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்த்த பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.


தமது உன்னிச்சை கிராமத்தில் அமைந்துள்ள குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்படும்போது, குளத்தை அண்டிய தமது கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படாதது பெரும் அநீதியானது என  ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

"அரசே உடனடியாக குடிநீரை வழங்கு, நீர் இன்றி யார் வாழ முடியும் - நாங்கள் என்ன பாவம் செய்தோம்?, அசுத்தமான குடிநீரை பருகி வரும் எமக்கு சுத்தமான குடிநீரைத்தா, எம்மை ஆரோக்கியமாக வாழ விடு" போன்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உருப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் போன்றோர், இந்த விடயம் தொடர்பில் தாம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தொடர்ந்து இதனை நாடாளுமன்றத்தில் கொண்டு செல்லவுள்ளதாகவும், அல்லது தமது நிதி ஒதுக்கீட்டில் இப் பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர். 
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment