நிராஜ் ரொஷான் உள்ளிட்ட எழுவர் விடுவிப்பு

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட எழுவரை கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பிலான வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதி மன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற காரணத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment