மாவா பாக்குடன் யாழ்.வாசி கைது

மாவா பாக்கு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

நெல்லியடியில் வைத்து நேற்று மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் கரணவாயைச் சேர்ந்தவர் என்றும் 26 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் பயணித்தவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவரிடம் இருந்து 200 கிராம் மாவாப் பாக்கு கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment