ஜியோவைப் பின்பற்றும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ரூ.48 மற்றும் ரூ.98 திட்டத்தை தனது   வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.  

ஜியோ நிறுவனம் சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுத்தது போல ஏர்டெல் நிறுவனமும் பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. 

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் மாதாந்திர ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களை கவர புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. 

அதன்படி, ரூ.48 மற்றும் ரூ.98-க்கு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

ரூ.48 ரீசார்ஜ் மூலம் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவும், ரூ.98 ரீசார்ஜ் மூலம் 6 ஜிபி டேட்டா 28 நாள்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும். ரூ.98 ரீசார்ஜுக்கு மட்டும் தினமும் 10 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 

இந்த இரண்டு திட்டங்களுமே குறைந்த விலையில் டேட்டா சலுகையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் வந்திருக்கின்றன. 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment