வடமராட்சியில் படகு மற்றும் வலைகளுக்குத் தீ வைப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி   கிழக்கு  பகுதியில், மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய படகு மற்றும் வலைகளே தீயில் எரிந்து நாசமாகியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன்  கொட்டோடை பகுதியில்  புதிதாக கரை வலையை கொள்வனது செய்த ஒருவர் நேற்றைய தினம் முதல் முதலாக தொழிலை மேற்கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடற்கரையில் எதோ எரிந்து கொண்டிருப்பதை கண்ணுற்று கடற்கரைக்குச் சென்றபோது படகு மற்றும் வலைகள் எரிந்து கொண்டிருந்துள்ளன.

ஊர் மக்கள் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் அது பயனளிக்கவில்லை.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்தனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment