மன்னாரிலும் விகாரி புத்தாண்டை கொண்டாடிய தமிழர்கள்!









மன்னார் மாவட்ட மக்கள் பிறந்திருக்கும் விகாரி புத்தாண்டை சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14)   கொண்டாடியுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்து  ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக மன்னார் உப்புக்குளம்,திருக்கேதீச்சரம் ஆகிய ஆலயங்களில் விசேட பூஜை இடம் பெற்றுள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும்  விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது.

 புத்தாண்டு விசேட பூஜை வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment