வீசா இல்லாமல் தங்கியிருந்தவர்கள் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் வீசா இல்லாமல்  தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக  பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

 கல்கிஸ்ஸ - வடரப்பல பிரதேசத்தில் 6 பேரும் மற்றும் வெலிகட பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் , அவர்கள் அனைவரும் நைஜீரியா பிரஜைகள் எனத் தெரியவந்துள்ளது.

நவகமுவ பகுதியில் ஈரான் நாட்டவரும் , ரத்மலானை பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

தெஹிவளை - நெதிமால பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.   


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment