வெள்ளை மாளிகை முன்பாக நபரொருவர் தீக்குளிப்பு

அமெரிக்காவின்  வெள்ளை மாளிகை  முன்பாக மர்ம நபர் ஒருவர் தீக் குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது. இனந்தெரியத குறித்தநபர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டதை அமெரிக்காவின் இரகசிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது.


இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட, வெள்ளை மாளிகையின் அருகே பாதசாரி போக்குவரத்தை மூடியதோடு, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களையும் வேகமாக அப்புறப்படுத்தினர்.

இந்த  சம்பவத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் தான் இருந்தார், ஆனால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அந்த இரகசிய சேவை கூறியுள்ளது.

ஒரு மின்னணு சக்கர நாற்காலி-வகை ஸ்கூட்டரை இயக்கி கொண்டு வந்த நபரொருவர், பென்சில்வேனியா அவென்யூ பகுதிக்கு வந்ததும் திடீரென அவருடைய ஆடையில் தீயை வைத்துக் கொண்டதாகக் கூறியுள்ளனர்.

அவருக்கு அருகே மர்மப் பொதி  ஒன்றை பொலிஸார் கண்டறிந்ததை அடுத்து, அவருக்கு முதலுதவி கொடுத்த பின்னர் அவரைக் கைது செய்தனர்.

சம்பசத்தில் குறித்த நபருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் டிரம்ப் ரூஸ்வெல்ட் அறையில் தேசத்தின் 5 ஜி நெட்வொர்க்கைப் பற்றி பேசிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment