குண்டுவெடிப்பு - விசாரணைகளுக்கு உதவத் தயார் - திரேசா மே

நாட்டின் தற்போதைய  நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார் பிரித்தானியப் பிரதமர் திரேசா மே.

இதன்போது குண்டுத்தாக்குதல் காரணமாக ஏற்பட்ட    இழப்புக்கள் தொடர்பில் தனது  அனுதாபத்தை  பிரித்தானியப் பிரதமர்    வெளியிட்டிருக்கின்றார்.

பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு  பிரித்தானியாவின்   உதவியை  வழங்கத்  தயார் என்றும்   இதன்போது   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பிரித்தானியப் பிரதமர்   தெரிவித்திருக்கின்றார். 

இதேவேளை  இந்தக்  குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் பிரித்தானியாவின் விசேட குழுவொன்று   இலங்கைக்கு வருகை தருவதற்கு  ஏற்பாடாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment