தம்பதியருக்கு ஆயுள் தண்டனை

குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்று தீர்ப்பு வழங்கியது. 

இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்ரவதை படுத்தி வந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டேவிட் ஆலன் டர்பின்  இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின்  இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர்.

இக் குழந்தைகள் பிறந்ததிலிருந்து அவர்களை வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். 

ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக  தப்பி வந்து பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்தாள். அதைத் தொடர்ந்து பொலிஸார் வீட்டுக்குச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளையும் மீட்டனர்.

வீட்டில் அடைத்து வைத்திருந்த குழந்தையின் பெற்றோரைக் கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த மன்று தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. சிறை தண்டனை அனுபவித்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment