சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய இராணுவ தினத்தினை முன்னிட்டு இன்று   ஜனாதிபதியினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதப்பத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த வெற்றியை பறைசாற்றும் முகமாக ஆண்டுதோரும் தேசிய இராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment