ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6. 3 ஆக பதிவானது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில், உள்ளூர் நேரப்படி இன்று 8. 48 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6. 3 ஆக நிலநடுக்கம் பதிவானது.

மியாசகி பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இருந்தும், அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment