பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்து  கொள்ளவிருந்த நிகழ்வொன்றின்போது அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிபரல் கட்சிக்கான நிதி திரட்டும் நிகழ்வு ஒன்ராறியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரின் செயற்பாடு பொதுமக்களின் பாதுகாப்பிற்கோ பிரதமருக்கோ அச்சுறுத்தலாக அமையவில்லை எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment